சற்று முன்
Home / செய்திகள் / யாழில் இருந்து கொழும்பு சென்ற ஹயஸ் டிப்பருடன் மோதி விபத்து – நால்வர் பலி 5 பேர் படுகாயம்

யாழில் இருந்து கொழும்பு சென்ற ஹயஸ் டிப்பருடன் மோதி விபத்து – நால்வர் பலி 5 பேர் படுகாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் டிப்பா் வாகனத்துடன் மோதியதில் 4 போ் உயிாிழந்துள்ளதுடன், 5 போ் படுகாயமடைந்திருக்கின் றனா்.

இன்று (18) அதிகாலை 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வாகனத்தில் பயணித்த 3 பேரும், வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்த னர். 

மற்றும், வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 8 பேர் மற்றும் பாதையில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  

விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பில் டிப்பர் வாகன ஓட்டுனர் கைது செய்யப்ப ட்டுள்ளதுடன்  சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com