ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவின் தலைவர்களிற்கிடையிலுமான சந்திப்பில் குறிப்பிடத்தக்க இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பொதுஜன பெரமுனவின் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது.
இதன்போது, இரு கட்சிகளும் விரைவில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி கூட்டணியொன்றை அமைக்க வேண்டுமென மஹிந்த ராஜபக்ச வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாகவும், எனினும் அது குறித்து கட்சிக்குள் ஆலோசித்து பதிலளிப்பதாக மைத்திரி தெரிவித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
சு.கவின் மத்தியகுழு நாளை மீளவும் கூடி இது குறித்து ஆராயவுள்ளது.