யாழ்ப்பாணம் – மானிப்பாயில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மானிப்பாய் இணுவில் வீதியில் சுதுமலை வடக்கு அ.த.க பாடசாலை (செல்லத்துரை ஸ்கூல்) அருகில் இன்று இரவு சுமார் 9.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்திலேயே இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இன்னொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இளைஞன் 23 வயதுடையவர் எனக் கூறப்பட்ட போதும் அவரது பெயர் விபரம் வெளியாகியிருக்கவில்லை.
இதே வேளை தமது உத்தரவை மீறி உந்துருளிகளை நிறுத்தாது ஆறு பேர் கொண்ட குழு பயணித்ததாகவும், அதனை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.