வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவது தொடர்பாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ் வரன், பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் உள்ளடங்கலாக 23 உறுப்பினர்கள் புறக்கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக சனிக்கிழமை (05) முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரம் இந்திய துணை தூதரகத்தை தொடர்பு கொண்டு எந்த வகையிலான உதவிகள் தேவை என கேட்கப்பட்டதாகவும், அதன் போது துணை தூதரகத்தால் உதவி பொருட்கள் எவையும் தேவையில்லை என கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையிலேயே ஞாயிற்றுக்கிழமை அவைத்தலைவரால் கூட்டப்பட்ட கலந்துரையாடலை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் புறக்கணித்ததாக தெரியவருக்கிறது.
இருந்தபோதிலும் கூட்டத்தில் கலந்துகொண்ட 15 பேரில் எதிர்க்கட்சிதவிர்ந்த ஏனையஉறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அணி சார்ந்தவர்கள் என்றும்முதலமைச்சருக்கும் சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக ஏற்பட்ட பலப்பரீட்சையே ஞாயிற்றுக்கிழமைய ஒன்றுகூடல் புறக்கணிப்பு என உள்வீட்டுத் தகவல்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம்
சி.வி.விக்னேஸ்வரன் (முதலமைச்சர்)
பொ.ஐங்கரநேசன் (விவசாய அமைச்சர்)
எம்.கே.சிவாஜிலிங்கம்
அனந்தி சசிதரன்
இமானுவேல் ஆர்னல்ட்
க.தர்மலிங்கம்
க.சர்வேஸ்வரன்
வே.சிவயோகன்
ச.சுகிர்தன்
அன்டனி ஜெகநாதன் (பிரதி அவைத்தலைவர்)
ஜாஸ்தீன் ஜவாகர்
வ.கமலேஸ்வரன்
கிளிநொச்சி
த.குருகுலராஜா (கல்வி அமைச்சர்)
வவுனியா
பா.சத்தியலிங்கம் (சுகாதார அமைச்சர்)
த.லிங்கநாதன்
அ.ஜெயதிலக்க
தர்மபால செனவிரத்ன
மன்னார்
பா.டெனிஸ்வரன் (மீன்பிடி அமைச்சர்)
எஸ்.குணசீலன்
அயூப் அஸ்மின்
எஸ்.சிராய்வா
எம்.ரஜீஸ்
அ.ரிப்கான்