சற்று முன்
Home / செய்திகள் / மலையக தியாகிகள் நினைவேந்தல் அனுஸ்டிப்பு !!

மலையக தியாகிகள் நினைவேந்தல் அனுஸ்டிப்பு !!

மலையக மக்களின் உரிமைக்காகவும், மண்ணுக்காகவும் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்வு 11.05.2018 இன்று அட்டன் இந்திரா மண்டபத்தில் இடம்பெற்றது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய பொறுப்பாளர் இரா. ஜீவன் ராஜேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மலையக தியாகிகளை நினைவுகூரும் முகமாக அதிதிகளாலும், பொது மக்களாலும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து மலையக தியாகிகள் தொடர்பாக அதிதிகளால் கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சமூக அமைப்புகள், பிரிடோ நிறுவன நிகழ்ச்சி திட்ட இயக்குநர் என பலரும் கலந்து கொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com