சற்று முன்
Home / செய்திகள் / பேக்கரி பொருட்களை விற்பனைசெய்யும் வாகனத்துள் சிக்குண்டு ஒன்றரை வயது குழந்தை பலி

பேக்கரி பொருட்களை விற்பனைசெய்யும் வாகனத்துள் சிக்குண்டு ஒன்றரை வயது குழந்தை பலி

நிந்தவூர் பகுதியில் பேக்கரி பொருட்களை விற்பனை செய்து வரும் வாகனம் ஒன்றில் சிக்குண்டு ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
இன்று (20) மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் நிந்தவூர் 6ம்,பிரிவைச் சேர்ந்த கிண்ணியாகாரரின் பேரனான ஒன்னரை வயதுக் குழந்தை “அஜ்மல் ஹம்தான் எனும் குழந்தையே பேக்கரி வண்டியில் மிதிபட்டு நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற வேளையில் இடையில் உயிர் பிரிந்துள்ளது.

குழந்தையின் தாய் பேக்கரி வண்டியில் சாமான்கள் வாங்கிக்கொண்டிருந்த போது குழந்தை வண்டிக்கு முன் நின்று கொண்டிருந்ததை கவனங்கொள்ளாத பேக்கரி சாரதி வண்டியை முன் நகர்த்திய போதே இப் பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com