சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்கும் பெருந்தோட்ட இளைஞர்களின் நலன்கருதி புதிய கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மலையக அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சும், இலங்கை வங்கியும் இணைந்து கடன் திட்டத்தை அமுலாக்குகின்றன.
முதற்கட்ட கடன் விநியோக நிகழ்ச்சி அமைச்சர் பழனி. திகாம்பரம் தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன் கீழ் 8 சதவீத சலுகை வட்டியின் கீழ் கடன் பெறலாம். இதற்கு மலையக அபிவிருத்தி அமைச்சு 80 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் இக்கடன் திட்டம் நடைமுறையில் உள்ளது.