யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இன்று இடம்பெற உள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது.
கடந்த 3ம் திகதி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் முற்படுத்தப்பட்டனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜனாதிபதிக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையே இன்றய சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பின்போது பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் விடுவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க வழியமைக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.