சாவகச்சேரி – நாவக்குழி பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர் பலியானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் நாவக்குளி பகுதியைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவரே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்தகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒரவரைக் கைது செய்துள்ள சாவகச்சேரிபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.