யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்பாதுகாவலரின் இறுதி சடங்கு இன்றைய தினம் (26) சிலாபத்தில் நடைபெற்றது.
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான உப பொலிஸ் பரிசோதகர் ஹேமசந்திராவின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான சிலாபம் குமாரகட்டுவில் பகுதியில் இன்றைய தினம் நடைபெற்றது.
இறுதி சடங்கில் வடமாகாண நீதிபதிகள் , சட்டத்தரணிகள் , நீதிமன்ற உத்தியோகஸ்தர்கள் , நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு பொலீசார் , பொலீசார் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.