சற்று முன்
Home / செய்திகள் / சஜித்தை எச்சரிக்கும் ரணில்; – இறுதி வாய்ப்பாம் ..

சஜித்தை எச்சரிக்கும் ரணில்; – இறுதி வாய்ப்பாம் ..

குருநாகலில் இன்று (5) நடைபெறும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவான பேரணியில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதென கட்சி உயர்பீடம் தீர்மானித்துள்ளது.

இது குறித்த அறிவித்தல், கட்சியின் சகல பிரமுகர்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கையென்பது- சிலவேளைகளில் அவரது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதாகவும் அமையலாமென மூத்த தலைவர் ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்திருந்தார்.

இன்றைய பேரணியை இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க ஏற்பாடு செய்துள்ளார். பிற்பகல் 2.30 மணிக்கு பேரணி ஆரம்பிக்கும்.

இதில் கட்சியின் 24 வரையான எம்.பிக்கள் கலந்துகொள்வார்கள் என சஜித் அணி எதிர்பார்க்கிறது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com