குருநாகலில் இன்று (5) நடைபெறும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவான பேரணியில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதென கட்சி உயர்பீடம் தீர்மானித்துள்ளது.
இது குறித்த அறிவித்தல், கட்சியின் சகல பிரமுகர்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கையென்பது- சிலவேளைகளில் அவரது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதாகவும் அமையலாமென மூத்த தலைவர் ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்திருந்தார்.
இன்றைய பேரணியை இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க ஏற்பாடு செய்துள்ளார். பிற்பகல் 2.30 மணிக்கு பேரணி ஆரம்பிக்கும்.
இதில் கட்சியின் 24 வரையான எம்.பிக்கள் கலந்துகொள்வார்கள் என சஜித் அணி எதிர்பார்க்கிறது.