ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இன்று காலி – ரத்கமவில் நடந்த தேர்தல் பரப்புரையில் மேடை ஏறி உரையாற்றினார் பிரபல கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான்
நாட்டின் வளமான பாதுகாப்பான எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு மக்கள் எதிர்வரும் தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவுக்கு ஆதரவை வழங்கவேண்டுமென டில்ஷான் இங்கு மக்களை கேட்டுக்கொண்டதுடன் தாமும் அதே காரணத்திற்காகவே கோட்டாபயவை ஆதரிப்பதாக குறிப்பிட்டார்.
டில்ஷானின் உரை முடிந்த பின்னர் அவரை தனது அருகில் அழைத்த கோட்டபாய ராஜபக்ச அந்த உரைக்கு பாராட்டை தெரிவித்ததாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.