சற்று முன்
Home / செய்திகள் / கெத்துக் காட்டியது தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்

கெத்துக் காட்டியது தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் இதுவரை கூட்டு சேராத தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தனது மக்கள் ஆதரவு தளத்தை காண்பிக்க பொது கூட்டமொன்றை நடத்தியுள்ளது.

தனது கட்சியின் யாழ்.மாவட்ட உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்தியுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் துணை பொதுச் செயலாளர் சன் தயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் ஜெனிவா-உண்மைகளும் மாயைகளும் என்ற தலைப்பில் அரசியல் கருத்தியலாளர் நிலாந்தன் அவர்களும், ஊடகங்கள் சொல்லும் அரசியலைப் புரிந்து கொள்ளல் என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைகழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி. ரகுராம்; அவர்களும், வழிவரைபடம் இல்லாத தமிழ்த் தேசிய அரசியல் என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர். வி.எஸ். சிவகரன் அவர்களும் உரையாற்றினார்கள்.

இவர்களுடன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் . பொ. ஐங்கரநேசன் அவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக உரையாற்றி இருந்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com