சயந்தன் சரவணா முறுகல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. சரவணா நடாத்திய ஷப்றா நிதி நிறுவனத்தினால் ஏமாற்றப்பட்ட குடும்பங்களில் சயந்தனின் குடும்பமும் ஒன்று என்ற அதிர்ச்சித் தகவலை சயந்தன் தரப்பு வெளியிட்டிருக்கிறது.
சயந்தனின் பாட்டி தனது இறுதிக்காலத்தில் தனது பராமரிப்புச் செலவுகளுக்காக ஒருதொகைப் பணத்தை சரவணாவின் ஷப்றா நிதிநிறுவனத்தில் வைப்பிலிட்டுள்ளார். ஆனால் சிலவருடங்களிலேயே பலநூற்றுக்கணக்கான பொதுமக்களின் வைப்புப் பணத்தை சரவணாவும் பங்களரும் கபளீகரம் செய்து விட்டார்கள் என்பது யாவரும் அறிந்ததே.
இதனால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் பல. தமது பெண்பிள்ளைகளின் திருமணத்திற்காக சீதனம் கொடுக்க பெற்றோரினால் சேமித்த பணம் இவ்வாறு சரவணா அன்ட் கோ வினால் மோசடி செய்யப்பட்டதால் திருமணமாகாமலே ஏராளம் யாழ்ப்பாணத் தமிழ் பெண்கள் இன்றும் முதிர்கன்னிகளாக உள்ளனர்.
தனது பாட்டி இறுதிவரை போராடியும் சரவணா அன்ட் கோ அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேயில்லை என்றும் தனது மரணச்செலவுக்காவது அந்தப்பணத்தை தனது பேரனான சயந்தனிடம் ஒப்பகை்குமாறு கடிதம் எழுதிவிட்டு தனது பாட்டி இறந்ததாக சயந்தன் தனது ஆதரவாளர் மத்தியில் விபரம் தெரிவிக்க அதனை யாரோ ஒருவர் சரவணபவனிடம் போட்டுக் கொடுக்க ஆரம்பமானதுதான் சரவணபவன் சயந்தன் முறுகல்.
அண்மையில் அராலிப்பகுதியில் குள்ளமனிதன் வருகிறான் என்று மக்களை பீதிக்குள்ளாக்கி அதில் அரசியல் இலாபம் தேட முனைந்த சரவணா பக்கா பிளானுக்கும் ஆப்படித்தவர் இந்த சயந்தன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.