சற்று முன்
Home / செய்திகள் / காற்றில் பறக்கும் வாக்குறுதி ! ஜனாதிபதி நாளை கட்டார் விஜயம் !!

காற்றில் பறக்கும் வாக்குறுதி ! ஜனாதிபதி நாளை கட்டார் விஜயம் !!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதியால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி காற்றில் பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கொழும்பில் ஜனாதிபதியைச் சந்தித்த இவர்கள் அனைவருக்கும் எதிவரும் புதன்கிழமைக்குள் நல்லதொரு பதிலை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். எனினும் அவர் கூறிய புதன்கிழமைக்கு முதல்நாள் செவ்வாய்க்கிழமை இன்னும் சில மணித்தியாலங்களில் முடிவடைகின்றது. நாளை காலை ஜனாதிபதியும் இருநாள் சுற்றுப்பயணமாக கட்டாருக்குப் பறந்துவிடப்போகின்றார். உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளில் உடல் நிலையும் மிக மோசமடைந்துவிட்ட நிலையில் நமது அரசியல் தலைமைகளும் வாக்கை நம்பியவர்களும் இனி என்ன செய்யப்போகின்றார்கள் ? இன்று இரவுக்குள் தீர்வு பெற்றுக்கொடுப்பாரா ஜனாதிபதி ?

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com