சற்று முன்
Home / செய்திகள் / கர்ப்பிணிப் பெண்ணை உதைந்து விழுத்தி தாலிக்கொடி அறுப்பு – மீசாலையில் மிலேச்சைத்தனம்

கர்ப்பிணிப் பெண்ணை உதைந்து விழுத்தி தாலிக்கொடி அறுப்பு – மீசாலையில் மிலேச்சைத்தனம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலையில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தாலிக்கொடி மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவரால் அறுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவம் இன்று மதியம் 1.30 மணிக்கு மீசாலை கிழக்கு சிற்றம்பலம் வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியால் மோட்டார்ச்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த திருடர்கள் கர்ப்பிணிப் பெண்ணை உதைந்து விழுத்தி தாலிக்கொடியினை அபகரித்து சென்றுள்ளனர். இதன்போது குறித்த பெண் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அண்மையிலும் மீசாலைப்பகுதியில் நான்கு வழிப்பறிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com