நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, நேற்று (05), பொலன்னறுவையில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, வடமத்திய மாகாண சபை உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல ஆகயோரின் பங்குப்பற்றலுடன், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொலன்னறுவை போதனா வைத்தியசாலையிலிருந்து, கந்துருவெல நகர் வரை வந்தடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், சபாநாயகர் கரு ஜயசூரியவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர்.