சற்று முன்
Home / செய்திகள் / “ஒற்றையாட்சிக்கு அப்பால் ஒரு அடியும் நகராது” – ரணில் வெற்றிக் கர்ஜிப்பு

“ஒற்றையாட்சிக்கு அப்பால் ஒரு அடியும் நகராது” – ரணில் வெற்றிக் கர்ஜிப்பு

ஒற்றையாட்சித் தீர்வுக்கு அப்பால் ஐக்கிய தேசியக் கட்சி செல்லாது என்று அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய ஜனநாயக முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டு ஊடாக அரசியல் பணிகள் தொடரும் என்ற அறிவிப்பையும் அவர் விடுத்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் காலி முகத்திடலில் நீதிக்கான போராட்டம் இன்று திங்கட்கிமை மாலை இடம்பெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குங்கள், ஆட்சிப் பீடமேறிய அடுத்த நிமிடமே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்துவிடுகின்றோம்” என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com