படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் மயில்வாகனம் நிமலராஜனின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் யாழ்.ஊடக அமையத்தில் 19.10.2015, திங்கட்கிழமை பிற்பகல் -4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந் நினைவேந்தல் நிகழ்வில் ஊடக நண்பர்கள், ஊடகப்பணியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு யாழ்.ஊடக அமைய ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.