இசைப்பிரியா பற்றிய படத்துக்கு தடை : பின்னணி காரணம் !
(பதிவு செய்த நாள் – செப்டம்பர் 13, 2015, 06.23 PM) போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காட்சியை நீக்க சொன்னார்கள். அதற்கு நான் மறுத்ததால் மீண்டும் படத்துக்கு அனுமதி சான்றிதழ் கொடுக்க மறுத்து, படத்துக்கு மத்திய தணிக்கை குழு தடை விதித்து விட்டார்கள் படத்தின் இயக்குனர் கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, படையினரால் கொடூரமாக சிதைக்கப்பட்டதை கருவாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படம் தயாரிக்கப்பட்டது. இசைப்பிரியாவாக தான்யா நடித்து இருக்கிறார். இளையராஜா இசையமைத்து இருக்கிறார். கு.கணேசன் இயக்கத்தில், குருநாத் சலதானி தயாரித்து இருக்கிறார்.
இந்த படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுக்க மறுத்து தடை விதித்து இருக்கிறது. இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் கு.கணேசன் கூறுகையில், “என் பூர்வீகம் தமிழ்நாடு. வசிப்பது பெங்களூருவில். 6 கன்னட படங்களை டைரக்டு செய்திருக்கிறேன். முதன்முதலாக நான் டைரக்டு செய்த தமிழ் படம், ‘போர்க்களத்தில் ஒரு பூ’. இலங்கையில், ஊடகவியலாளர் இசைப்பிரியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை உலகுக்கு காட்டும் விதமாக ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தை இயக்கினேன்.
இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் என்னை இந்த படத்தை இயக்க தூண்டியது. இந்த படத்தை முதன் முதலாக கடந்த மே மாதம் தணிக்கைக்கு அனுப்பினேன். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தை திரையிட அனுமதி மறுத்தார்கள். அதைத்தொடர்ந்து படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பினேன். மறுதணிக்கை குழுவின் தலைவராக இருந்த எஸ்.வி.சேகரும், தமிழ்நாடு தணிக்கை குழு அதிகாரி பழனிச்சாமியும் படத்தை பார்த்துவிட்டு, அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள்.
அதன்பிறகு படத்தை டெல்லிக்கு அனுப்பினேன். அங்கு சில காட்சிகளை நீக்க சொன்னார்கள். அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கிவிட்டு, மீண்டும் அனுமதி கோரி படத்தை அனுப்பினேன். இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காட்சியை நீக்க சொன்னார்கள். அதற்கு நான் மறுத்ததால் மீண்டும் படத்துக்கு அனுமதி சான்றிதழ் கொடுக்க மறுத்து, படத்துக்கு தடை விதித்து விட்டார்கள்.
இந்த படம், தமிழ் ஈழத்தை நியாயப்படுத்துவதாக-விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக இருப்பதாகவும், படத்தை வெளியிட்டால் இந்தியா-இலங்கை உறவு பாதிக்கும் என்றும் தணிக்கை குழுவினர் கூறுகிறார்கள். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்து இருக்கிறேன்” என்று கூறினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் ஆண்டுதோறும் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும், யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ் ஆண்டு செல்வி கிருஷ்ணராஜா செல்வி வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பட்டமளிப்பு விழா 14.03.2024, 15.03.2024 மற்றும் 16.03.2024 ஆகிய தினங்களில் ...
வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக எல். இளங்கோவன் இன்று அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை அரச தலைவர் செயலகத்தில் வைத்து இன்று (12) நண்பகல் அரச தலைவரின் செயலாளர் வழங்கினார். எதிர்வரும் 15.03.2024 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்குவரும்வகையில் வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக அரச தலைவர் செயலகத்தின் மேலதிக செயலாளர் ...
உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக அறிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறினார்! இது தொடர்பில் தனது பதவி விலகக் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அவர் அனுப்பியுள்ளார். குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து ...
நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் காணப்படும் கழிவுகளினால் சுற்றுச்சூழல் மாசடையும் அபாய நிலை ஏற்பட்டிருக்கின்றது. குறித்த திண்மக்கழிவு தரம்பிரித்தல் நிலையத்தில் கழிவுகள் மலைபோல் தொடர்ச்சியாக குவிக்கப்பட்டுவருவதால் அருகில் காணப்படும் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயக் கிணறுகள் பாதிக்கப்படுவதோடு அருகில் வாழும் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் ...
DOC-20230621-WA0042.Download வைத்திய கலாநிதி அமரர் வேல் சாரங்கனின் “வாழ்க்கை” கவிதை நூல் 24.06.2023 அன்று வெளியீடு செய்துவைக்கப்பட்டது. சாரங்கனின் “வாழ்க்கை” கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு சாரங்கனின் 31ஆம் நாள் நினைவு தினமான 24.06.2023 சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் பலாலி வீதி கோண்டாவிலில் உள்ள ராசமணி மண்டபத்தில் நடைபெற்ற சாரங்கனின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல சந்தி பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார்.2009 ஆம் ஆண்டு ...
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று 17.05.2023 பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் ...
யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இமானுவேல்ட் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்டமோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என தெரிய ...
வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயமொன்றில் இருந்து பித்தளை நடராஜர் சிலையை திருடியதாக சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கராயன்குளத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் மாதாந்த விடுமுறையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் கோவிலில் உள்ள விக்கிரகத்தை திருடி ...
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு , நையப்புடைக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரிடம் மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர ...