சற்று முன்
Home / செய்திகள் / ஆட்சிக் கவிழ்ப்புக்கு நேரம் வந்துவிட்டது !!! அதிகாரக் கைமாற்றம் அதிர்ச்சியைத் தரும் – மகிந்த பேட்டியால் பரபரப்பு !

ஆட்சிக் கவிழ்ப்புக்கு நேரம் வந்துவிட்டது !!! அதிகாரக் கைமாற்றம் அதிர்ச்சியைத் தரும் – மகிந்த பேட்டியால் பரபரப்பு !

தற்போது நாம் நினைத்த நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியுமான சூழல் தோன்றியுள்ளது எனவும் சரியான நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் எனவும் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிகாரம் எவ்வாறு கைமாறும் என்பது தொடர்பில் தன் அளவுக்கு அறிந்துவைத்துள்ள எவரும் இருக்கமுடியாது எனவும் அது அனைவருக்கும் அதிர்ச்சியைத் தரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2017ம் ஆண்டு ஆட்சியை கவிழ்ப்பதாக கூறியமை தொடர்பில் திவயின நாழிதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

தற்போது நாட்டில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது ஆட்சி கவிழ்க்கும் அந்த தருணத்தை நோக்கி விடயங்கள் நகர்வதை அனைவராலும் உணர்ந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்த அவர் அதிகாரம் எவ்வாறு கைமாறும் என்பது தொடர்பில் தன் அளவுக்கு அறிந்துவைத்துள்ள எவரும் இருக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தம்மிடமிருந்து ஆட்சி சொல்லிவிட்டு நழுவிச்செல்லவில்லை எனவும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் உத்தியோகபூர்வ முடிவு வரும் முன்னமே தான் வீட்டுக்குசென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது தங்கள் கைகளுக்கு பிடி வந்துள்ளது எனவும் எந்த நேரத்தில் எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொண்டு ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற விடயத்தை தாம் மிக நுணுக்கமாக கையாழ்வதாகவும் சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை மேற்கொண்டு ஆட்சியை மாற்றுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com