மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளால் தொடர்ச்சியாக நடத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளால் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கடந்த பெப்ரவரி 28ஆம் நாள் கவனயீர்ப்புப் பேரணியை நடத்தப்பட்டபோது கடமையில் நின்ற காவல்துறையினர் மற்றும் கடமையிலிருந்த மாவட்டச் செயலக அதிகாரிகள் அவர்களின் கடமையைச் செய்யவிடாது இடையூறு விளைவித்து குழப்பம் மேற்கொண்டதாக் கூறியே பட்டதாரிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ரீ.கிஷாந்த் உட்பட ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர்கள் 4 பேரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (08,மார்ச்) முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தால் அழைப்பாணை நேற்று திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.